நம்பிக்கையே கடவுள்!

சூரியனும் தமிழ் மாதங்களும்

சூரியனை வைத்துத் தான் தமிழ் மாதங்களும், அந்த தமிழ் மாதத்தில் வணங்க வேண்டிய தெய்வமும் கணக்கிடப்படுகிறது. உதாரணமாகச் சொன்னால் மேஷ ராசியில் சூரியன் வரும் காலம் சித்திரை, அந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இதற்குக் காரணம் மேஷ ராசியில் சூரியன் உச்சம் அடைகிறார் என்கிறது ஜோதிட நூல்கள் (ராசிச்சக்கரத்தில் சூரியன் உச்சம் அடைவது என்பது சூரியன் அதீத பலத்துடன் இருப்பதாக அர்த்தம்) . இதற்கு மாறாக ஐப்பசி மாதத்தில் சூரியன் நீசம் அடைகிறது (அம்மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பார். அது அவருடைய நீச வீடு) எனவே வெயிலின், தாக்கம் அவ்வளவு இருக்காது. மழை பொழியும். அது போல, கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிப்பது புரட்டாசி மாதம். கன்னி ராசி புதனின் உச்ச வீடு (புதனுக்கு பெருமாளே இஷ்ட தெய்வம் எனக் கருதப்படுகிறது. எனவே அந்நேரத்தில், பெருமாள் குடி கொண்டு இருக்கும் திருப்பதியில் பிரம்மோத்சவம் நடக்கும்).

இதே போல, ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்வார். கடகத்தில் சந்திரன் ஆட்சி பலம் பெறுகிறார். சூரியன் சிவனின் அம்சமாகும். சந்திரன் சக்தியின் அம்சமாகும். ஆடி மாதத்தின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் வீட்டில் ( கடக ராசியில் ) சஞ்சரிப்பதால். அம்மன் கோயில்களில் வழிபாடு கலை கட்டுவதுடன், அம்மாதத்தில் வரும் அமாவாசையும் ( ஆடி அம்மாவாசை) சிறப்பாக கருதப்படுகிறது.

இதே போல தனுசு ராசியான குருவின் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்யும் போது, குரு பகவான் மங்களத்தைத் தரும் கிரகம், ஆக அதுவே மார்கழி மாதம் எனப்படும். அதுபோல, மகரத்தில் சூரியன் வரும் காலம் , ஐயப்பன் கோயில்களில் மகர விளக்கு பூஜை நடக்கும். காரணம் அது சனியின் வீடு. அதனால் தான் கருப்பு வஸ்த்திரம் அணிந்து அன்னதானம் செய்து மலைக்கு செல்கின்றனர் பக்தர்கள். ஆக, ஜோதிடமும் வானவியலும் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தம் கொண்டது தான். மொத்தத்தில் ஜோதிடம் மூட நம்பிக்கை அல்ல.

Comments

Popular posts from this blog

X std SS PPT Collections TM & EM

6-10 SOCIAL SCIENCE GUIDES