Posts

கோடை விடுமுறை 2026

📢 பெற்றோர்களின் கவனத்திற்கு! பள்ளி கோடை விடுமுறை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் ☀️🏝️ பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கோடை விடுமுறைக்காகச் சில முக்கிய அறிவுறுத்தல்கள்: 🗓️ விடுமுறை தொடக்கம்: 17.04.2026 முதல். ✅ பாதுகாப்பு நடவடிக்கைகள்: ☀️ காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்கள் வெளியே விளையாடுவதைத் தவிர்க்கவும். 💧 போதுமான அளவு குடிநீர் அருந்துவதை உறுதி செய்யுங்கள். வெளியே செல்லும்போது தொப்பி அணிய அறிவுறுத்துங்கள். 🌊 கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் மாணவர்கள் குளிக்கச் செல்வதைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 🧠மனநலம் மற்றும் உடல்நலம்: தனிமையைத் தவிர்க்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட ஊக்குவியுங்கள். 🎶 டிவி மற்றும் செல்போன் பயன்படுத்துவதைக் குறைத்து, இசை மற்றும் சமூகத் தொடர்புகளில் ஆர்வம் காட்டச் சொல்லுங்கள். 🍎  பாரம்பரிய உணவுகள் மற்றும் கோடை காலத்திற்கு ஏற்ற பழவகைகளை மாணவர்களுக்கு வழங்கவும். மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, இந்த விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்கச் செய்வோம...

இயற்கை சிகிச்சை

       இயற்கை சிகிச்சை நீ கோயிலுக்கு போகிறாய்... மருத்துவரிடம் போகிறாய்... மாத்திரை சாப்பிடுகிறாய்... ஆனால் உன் உள்ளே இருக்கும் 7 சக்கரங்கள் அடைபட்டிருந்தால்? எந்த மருந்தும் வேலை செய்யாது. எந்த பூஜையும் முழுமை பெறாது. எந்த தியானமும் ஆழமாக இறங்காது. ஆனால் இயற்கை அம்மா? அவள் உன்னை இலவசமாக குணப்படுத்துவாள். 🌍 சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை அறிந்திருந்தார்கள். இன்று விஞ்ஞானமும் இதை உறுதிப்படுத்துகிறது. வா — ஒவ்வொரு சக்கரத்தையும் இயற்கையால் எப்படி திறப்பது என்று பார்ப்போம்! 👇 🔴 1. மூலாதாரம் — Root Chakra (அமைவிடம்: முதுகெலும்பின் அடிப்பகுதி) இந்த சக்கரம் அடைபட்டால்: பயம், பாதுகாப்பின்மை, பண கஷ்டம், உடல் சோர்வு, "என்னால் முடியாது" என்ற எண்ணம் — இவை தொற்றிக்கொள்ளும். 🌿 இயற்கை தீர்வு: பூமியில் படு செருப்பை கழற்று. புல்வெளியில், மண்ணில், பாறையில் — படுத்துக்கொள். கண்களை மூடு. உன் முதுகு முழுவதும் பூமியை உணரட்டும். பூமிக்கு "Earthing" என்ற சக்தி இருக்கிறது. உன் உடலில் இருக்கும் எதிர்மறை மின்னணுக்கள் (free radicals) பூமியில் கரைந்துவிடும். வேர்கள் ஆழமாகும்போது ...

X std 2026 Public Exam DGE All Subject Answer key

X std 2026 Public Exam DGE All Subject Answer key

10 SS PUBLIC EXAM QP 2026

Public Exam 2026 10 Social Science Question Paper 

2026 X SS Public Exam QP & Answer key TM & EM

 X Social Science Public Exam 2026 QUESTION PAPER  Answer key TM EM

Youtube Link

Youtube Link

THIRAN 6-8 All pdfs

Thiran Pdfs 6-8 All

THIRAN pdfs

THIRAN Pdfs

6-10 std SS Annual Exam all links in one place

6-10 SS All Materials 8 SS All Materials 9 SS All Materials 9 SS 1 mark worksheets Q & A X SS MLLM - Dull students X SS PUBLIC EXAM REVISION LINK

8th SOCIAL SCIENCE All in one

GUIDE  TM   2&5 Marks Q&A   1 Mark Question Bank  TM  Choose Fill up Match True/False Map  TM           TM       Map & Workbook TM EM           EM Mind Maps All Lessons  TM   EM Unit Test QP TM போர்கள் அட்டவணை

நம்பிக்கையே கடவுள்!

சூரியனும் தமிழ் மாதங்களும் சூரியனை வைத்துத் தான் தமிழ் மாதங்களும், அந்த தமிழ் மாதத்தில் வணங்க வேண்டிய தெய்வமும் கணக்கிடப்படுகிறது. உதாரணமாகச் சொன்னால் மேஷ ராசியில் சூரியன் வரும் காலம் சித்திரை, அந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இதற்குக் காரணம் மேஷ ராசியில் சூரியன் உச்சம் அடைகிறார் என்கிறது ஜோதிட நூல்கள் (ராசிச்சக்கரத்தில் சூரியன் உச்சம் அடைவது என்பது சூரியன் அதீத பலத்துடன் இருப்பதாக அர்த்தம்) . இதற்கு மாறாக ஐப்பசி மாதத்தில் சூரியன் நீசம் அடைகிறது (அம்மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பார். அது அவருடைய நீச வீடு) எனவே வெயிலின், தாக்கம் அவ்வளவு இருக்காது. மழை பொழியும். அது போல, கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிப்பது புரட்டாசி மாதம். கன்னி ராசி புதனின் உச்ச வீடு (புதனுக்கு பெருமாளே இஷ்ட தெய்வம் எனக் கருதப்படுகிறது. எனவே அந்நேரத்தில், பெருமாள் குடி கொண்டு இருக்கும் திருப்பதியில் பிரம்மோத்சவம் நடக்கும்). இதே போல, ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்வார். கடகத்தில் சந்திரன் ஆட்சி பலம் பெறுகிறார். சூரியன் சிவனின் அம்சமாகும். சந்திரன் சக்தியின் அம்சமாகும். ஆடி மாதத்தின் ப...

2026 10,11,12th exam Timetable single page

2026 Public Exam TT

தொலைபேசி

அலெக்சாண்டர் கிரகம்பெல்!!! இன்று உலகத்தின் எந்த மூலைக்கும் யாருடனும் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம், டெலிபோன் என்ற சாதனம். இதற்கு முதலில் அடித்தளம் இட்ட அறிவியல் மேதை, அலெக்சாண்டர் கிரகம்பெல். அலெக்சாண்டர் கிரகாம்பெல் வாழ்க்கை வரலாறு:- கிரகாம்பெல் 1847 மார்ச் 3ல், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் பிறந்தார். இவரது அப்பா சிறந்த எழுத்தாளர். பேச மற்றும் காது கேட்காத மக்களுக்கு கற்பிப்பது தொடர்பான புத்தகங்களை எழுதியவர். கிரகாம்பெல், எடின்பர்க்கில் உள்ள ராயல் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 14 ம் வயதில் பட்டம் பெற்றார். இவர் சில ஆண்டுகள் மட்டுமே முறையான கல்வி கற்ற போதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்கு சிறந்த கல்வியை கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வியை கற்றுக்கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்பு பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் வல்லுனராகத் திகழ்ந்தார். எனவே குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது. பின் எல்ஜினில் உள்ள வெஸ்டன் ஹவுஸ் அகாடமி கல்லூரியில் ஒரு ஆண்டு ஆசிரியராக இருந்தா...

கோகினூர் வைரம்

வைரத்தின் வரலாறு இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் “வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்ற பழமொழியும் வந்தது. வைரம் எப்படி உருவாகிறது? பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது. வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ? இன்றைக்கு நாம் உபயோகிக...

வைரத்தின் வரலாறு!

வைரத்தின் வரலாறு இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் “வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்ற பழமொழியும் வந்தது. வைரம் எப்படி உருவாகிறது? பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது. வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ? இன்றைக்கு நாம் உபயோகிக...

X Std Social Science 2025-26 MLLM Sai Sir

X Std  Social Science 2025-26 MLLM Thank You SAI Sir!! QUESTION BANK TM EM MLLM Q & A TM Slip Test 42 Marks only EM

வாழ்வின் சுவை!

Image
வாழ்வு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே மரணமும் சத்தியமானது. எல்லா உடல்களும் மரணத்தின் சுவையை சுவைத்தே தீருகின்றன. “ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க வேண்டியதாய் இருக்கின்றது” சுவை என்றால் என்ன? இனிப்பு, கசப்பு, சிலபோது உவர்ப்பு, இந்த ருசிகளையே நாம் சுவை என்கிறோம். எனவே மரணம் சிலருக்கு இனிப்பாக இருக்கலாம். சிலருக்குக் கசப்பாக இருக்கலாம். வேறுசிலருக்கு உவர்ப்பாகவும் இருக்கலாம். வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதன் அடிப்படையில்தான் மரணத்தின் சுவையும் அமையும். சுவை எவ்வாறு இருந்தாலும் வாழ்வின் இறுதி முடிவல்ல மரணம். மாறாக வாழ்வின் தொடர்ச்சிதான் மரணம். மறுமை வாழ்வின் விசாலமான கதவுகளை திறந்து தருவதுதான் மரணம். மரணத்துக்கு வரம்புகள் கிடையாது. சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடோ, ஆண்-பெண் என்ற பாகுபாடோ கிடையாது. மரணம் வந்துவிட்டால் அனைத்தையும் விட்டுவிட்டுச் சென்று விடவேண்டியதுதான். நம்முடைய மரணத்துக்காக உலகம் தவித்துப்போகும் என்பதோ, உலகமே அழும் என்பதோ கிடையாது. நமக்காக அழும் ஒருசிலர்கூட கொஞ்ச நாட்கள்தான் அழுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நமக்காகக் கண்ணீர் சிந்தவோ, நம்மைக் குறித்து நினைக்கவோகூட...

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது? தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி ‘மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம் அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள், யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு’ என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள். மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார். முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, ‘செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது’ என எழுதப்பட்டிருந்தது. ஆனால், ‘செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?’ அதனால் இது ச...

வெற்றிக்கு வழி!

வெற்றிக்கு வழி! - ஒரு மகாபாரதக் கதை எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் கோட்டை விட்டவர்கள், எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் பிரகாசிக்க முடியாது. மகாபாரதம் இது குறித்து அற்புதமாக விளக்கியிருக்கிறது! பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தனர். பாண்டவர்களின் திறமையே எங்கும் பளிச்சிட்டது. அதனால், துரியோதனனுக்குள் பொறாமைத் தீ, கனன்று கொண்டே இருந்தது. வெற்றிக்கு வழி! ஒருநாள், பீஷ்மரிடம் வந்தவன், ‘தாத்தா! வில் வித்தை கற்றுத் தரும் துரோணர், அனைவரையும் சரிசமமாக பாவிப்பதில்லை. பாண்டவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு வேறு மாதிரியாகவும் பாடம் நடத்துகிறார். இதுபற்றி அவரிடம் கேளுங்கள்…’ என்று வற்புறுத்தினான். வேறு வழியின்றி துரோணரை சந்தித்த பீஷ்மர், தான் வந்த நோக்கத்தை நாசூக்காகத் தெரிவித்தார். உடனே துரோணர், ‘பிதாமகரே! நாளைய தலைமுறை இடையே எந்த வேறுபாடும் காட்டுவதில்லை! அனைவரையும் ஒன்றாகவே எண்ணி போதிக்கிறேன். என்ன தான் மழை பெய்தாலும் பாத்திரத்துக்கு தக்க படிதானே நீர் நிரம்பும்! அதற்காக மழையை குற்றம் சாட்ட முடி...

மனம் பாதி! மருந்து பாதி!!

*உங்கள் மூளையே சக்தி வாய்ந்த மருந்து! 'ப்ளாசிபோ' ரகசியத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!* Placebo Effect என்பது எந்த மாத்திரை, மருந்தும் இல்லாமல் நோயினை குணப்படுத்தும் ஒரு செயலாகும். அது எப்படி சாத்தியம் என்றுதானே கேட்கிறீர்கள்… வாருங்கள் விரிவாக பார்ப்போம். நோயை தீர்க்கும் சக்தி, மாத்திரைகளிலோ மருந்துகளிலோ மட்டுமில்லை, நம் மனதின் நம்பிக்கையிலும் உள்ளது என்றால் நம்புவீர்களா? நம் மூளையே ஒரு சக்திவாய்ந்த மருந்தாக மாறி, உடலின் வலிகளையும் சோர்வுகளையும் விரட்டும் இந்த ரகசிய நிகழ்வுதான் 'ப்ளாசிபோ விளைவு'. இது வெறும் கற்பனை அல்ல; இது நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் நரம்பியல் வேதியியல் ஆகியவற்றின் கூட்டுச்செயலாகும். மனதின் இந்த மகத்தான சக்தி எப்படி வேலை செய்கிறது, எந்தெந்த நோய்களுக்கு இது பலன் அளிக்கும் என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். உங்கள் மனம் ஒரு சக்திவாய்ந்த குணப்படுத்தும் மருந்தாக மாற முடியும். உங்கள் மூளை, ஒரு போலி சிகிச்சையை உண்மையான சிகிச்சை என்று உங்களை நம்ப வைத்து, அதன் மூலம் உங்கள் நோயை குணப்படுத்துகிறது. இதுவே ப்ளாசிபோ விளைவு (Placebo Effect) என்று ...